மைய்யத்தைக் குளிப்பாட்டுவது கடமையா?
💬 குளிப்பை கடமையாக்க கூடிய காரியங்களில் நான்காவது "மௌத்".
👉 ஒருவர் "மௌத்" ஆனால் அவரை உயிரோடு இருக்கக் கூடியவர்கள் குளிப்பாட்ட வேண்டும்.
👉 குளிப்பாட்டுவது கடமை என்பதற்கான ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும்.
💬 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நிச்சயமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகம் தூக்கி எறிந்து அதன் மூலம் மௌத்தான ஒரு ஹஜ்ஜூக்காக வேண்டி இஹ்ராம் அணிந்திருந்த ஒருவருடைய விஷயத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது அவரை நீரைக் கொண்டும் "சித்ர்" (இலந்தை மரம் இலை) யைக் கொண்டு குளிப்பாட்டுங்கள்.
நூல் - புகாரி - 1208, முஸ்லிம் - 1206.
👉 ஒரு மையத்தை குளிப்பாட்டுவது பர்லு கிபாயா வாகும்.
👉 ஒரு முஸ்லிம் மவுத்தானால் அங்கு இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம்களின் மீதும் அந்த மைய்யத்தை குளிப்பாட்டுவது கடமையாகும் அந்த மையத்துடைய குடும்பத்தாராக இருந்தாலும் சரி அல்லது வேறு பிற ஒருவராக இருந்தால் சரி யாராவது சிலர் அந்த மையத்தை குளிப்பாட்டினால் ஏனையவர்களை விட்டும் அந்த கடமை நீங்கி விடுகிறது, யாருமே அந்த மையத்தை குளிப்பாட்டவில்லை என்றால் அனைவருமே பாவியாகுவார்கள்.
👉 மேலும் குளிப்பாட்டக் கூடியவர் மையத்தை குளிப்பாட்டுகிற நிய்யத்தை வைப்பது அவருக்கு கட்டாயமாக இருக்கிறது.
👉 மேலும் ஒரு ஷஹீதாக்கப்பட்டவர் மார்க்கத்திற்காக வேண்டி யுத்தம் செய்து ஷஹீதாக்கப்பட்டவர் அவருடைய விடயத்தில் அந்த ஷஹீதை குளிப்பாட்டுவது கூடாது அவ்வாறு ஒருவர் ஷஹீதாகக்கப்பட்டால் கஃபனிட்டு அடக்கம் செய்ய வேண்டும் குளிப்பாட்டுவது ஹராமாக இருக்கிறது.
மைய்யத்தைக் குளிப்பாட்டுவது கடமையா?
💬 குளிப்பை கடமையாக்க கூடிய காரியங்களில் நான்காவது "மௌத்".
👉 ஒருவர் "மௌத்" ஆனால் அவரை உயிரோடு இருக்கக் கூடியவர்கள் குளிப்பாட்ட வேண்டும்.
👉 குளிப்பாட்டுவது கடமை என்பதற்கான ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும்.
💬 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நிச்சயமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகம் தூக்கி எறிந்து அதன் மூலம் மௌத்தான ஒரு ஹஜ்ஜூக்காக வேண்டி இஹ்ராம் அணிந்திருந்த ஒருவருடைய விஷயத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது அவரை நீரைக் கொண்டும் "சித்ர்" (இலந்தை மரம் இலை) யைக் கொண்டு குளிப்பாட்டுங்கள்.
நூல் - புகாரி - 1208, முஸ்லிம் - 1206.
👉 ஒரு மையத்தை குளிப்பாட்டுவது பர்லு கிபாயா வாகும்.
👉 ஒரு முஸ்லிம் மவுத்தானால் அங்கு இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம்களின் மீதும் அந்த மைய்யத்தை குளிப்பாட்டுவது கடமையாகும் அந்த மையத்துடைய குடும்பத்தாராக இருந்தாலும் சரி அல்லது வேறு பிற ஒருவராக இருந்தால் சரி யாராவது சிலர் அந்த மையத்தை குளிப்பாட்டினால் ஏனையவர்களை விட்டும் அந்த கடமை நீங்கி விடுகிறது, யாருமே அந்த மையத்தை குளிப்பாட்டவில்லை என்றால் அனைவருமே பாவியாகுவார்கள்.
👉 மேலும் குளிப்பாட்டக் கூடியவர் மையத்தை குளிப்பாட்டுகிற நிய்யத்தை வைப்பது அவருக்கு கட்டாயமாக இருக்கிறது.
👉 மேலும் ஒரு ஷஹீதாக்கப்பட்டவர் மார்க்கத்திற்காக வேண்டி யுத்தம் செய்து ஷஹீதாக்கப்பட்டவர் அவருடைய விடயத்தில் அந்த ஷஹீதை குளிப்பாட்டுவது கூடாது அவ்வாறு ஒருவர் ஷஹீதாகக்கப்பட்டால் கஃபனிட்டு அடக்கம் செய்ய வேண்டும் குளிப்பாட்டுவது ஹராமாக இருக்கிறது.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை