FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

மல சலம் கழிப்பதன் ஒழுக்கம் - பாடம் - 09

Share:

 


  ஓத வேண்டிய துஆ

باسم الله، اللهم إني أعوذ بك من الخبث والخبائث

ஓத வேண்டிய துஆ 

غفرانك، الحمد لله الذي أذهب عني الأذى وعافني، الحمد لله الذي أذاقني لذته، وأبقى من قوته، ودفع عنى أذاه

04 -  அல்லாஹ்வுடைய பெயர் அல்லது அது போன்ற கண்ணியமான பெயர்கள் இருந்தால் அவைகளை குர்ஆன் வசனங்கள் துவாக்கள் அத்கார்கள் இப்படியானவைகள் இருந்தால் அவைகளைக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் அல்லது மறைத்து வெளியில் விளங்காமல் மறைத்து நிலைமையில் அதை மறைத்து கொண்டு போக வேண்டும்.

 05 -  கலாஹாஜத்தை நிறைவேற்றக் கூடியவர் உட்காரும்போது கிப்லாவை முன்னோக்கவோ அல்லது கிபிலாவை பின் நோக்கவோ கூடாது .

👉அதாவது ஒருவர் முற்ற வழியில் எந்த விதமான கட்டிடமும் இல்லாத நிலைமையில் மறைப்பும் இல்லாத நிலைமையில் ஒரு முற்றவெளியில் ஒரு காட்டுப் பகுதியில் மலம் ஜலம் கழிப்பதாக இருந்தால் கிபுலாவை முன்னோக்க கூடாது கிப்லாவை பின்னோக்கவும் கூடாது. 

👉அதேபோல ஒரு கட்டிடத்துக்கு உள்ளால் இருந்தாலும் கூட அதற்காக வேண்டி அந்த கட்டிடம் தயார் செய்யப்படவில்லை என்று சொன்னால் அங்கேயும் கிப்லாவை முன்னோக்குவதும்  பின்னோக்குவதும் ஹராமாகும். 

👉ஒருவேளை கலா ஹாஜத்தை நிறைவேற்றுவதற்காக வேண்டி கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இருந்தால் அதுவும் 3 முலம் தூரத்தில் சுத்தி வர மூணு முழத்தால் உள்ள  180 சென்டிமீட்டர்கள் கொண்ட இடமாக இருக்குமாக இருந்தால் கலா ஹாஜத்துக்காக வேண்டிய அது தயார் செய்யப்பட்டிருந்தால் அங்கே கிபிலாவை  முன்னோக்கினாலோ அல்லது பின்னோக்கினாலோ பருவாய் இல்லை. 

💬 நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் மலம் கழிக்க சென்றால் கிபிலாவை முன்னோக்க வேண்டாம் மேலும் கிப்லாவை பின்னோக்கவும் வேண்டாம் என்றாலும் கிழக்குப்  பகுதியிலோ அல்லது மேற்குப் பகுதிக்கு அதனை ஆக்கிக் கொள்ளுங்கள் முன்னோக்குங்கள் என்பதாக கூரிய செய்தி எங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது.

06 -  மலம் ஜலம் கழிப்பதற்கு உட்காரக் கூடியவர் அவருடைய இடது காலின் மீது ஊன்றுதல் பிடித்து வலது காலை நட்டு வைத்து மலம் ஜலம் கழிப்பது சுன்னத்தாக இருக்கிறது. 

07 - சமயம் வானத்தை பார்க்காமல் இருப்பதும் தன்னுடைய மர்மஸ்தானத்தை பார்க்காமல் இருப்பதும் சுன்னத்தாக இருக்கிறது.

08 - வெளியாக கூடிய அந்த மலம் அல்லது ஜலத்தை பார்க்காமல் இருப்பதும் சுன்னத்தாக இருக்கிறது. 

09 - கதைத்துக் கொண்டிருப்பதும் மக்குருவாகப்பட்டுள்ளது. 

💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனஜலம் கழித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் சென்றார் அவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சலாம் கூறினார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு பதில் கூறவில்லை .

நூல் முஸ்லிம் 

அறிவிப்பாளர் இபுனு உமர் ரலியல்லாஹு அன்ஹு 

💬மேலும் அபூதாவூதில் வரக்கூடிய ஒரு செய்தியில் அபு சாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சொல்வதை நான் கேட்டேன் இரண்டு மனிதர்கள் ஒன்றாக மலம் கழிப்பதற்கு சென்று ஒருவர் மற்றவருடைய அவுரத்தை பார்க்கும் விதத்தில் இருந்து கதைத்த வண்ணம் மலம் ஜலம் கழித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா அந்த இருவர்களுடைய செயலை கோபிக்குகிறான் .

10 - மலம் ஜலம் கழிக்கும் போது  சாப்பிடுவது குடிப்பது வீணான விளையாட்டுகளில் பராக் ஆவது இவைகள் மக்ரூஹ் ஆக்கப்பட்டுள்ளது. 


இரண்டு மனிதர்கள்  மலம் கழிப்பதற்காக சென்று அவ்விருவரும் அவுரத்தை திறந்தவாறு கதைத்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா அதன் மீது கோபிக்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை கேட்டதாக அபூ சயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் 

நூல் அபூதாவூத்

11 -சுத்தம் செய்யும்போது இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும் வலது கையால் தண்ணீரை ஊற்றி இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும்.

 12 - கல்லால் சுத்தம் செய்ய தேவைப்பட்டால் இடது கையால் தன்னுடைய மர்மஸ்தானத்தை பிடித்து வலது கையால் அந்த கல்லை பிடித்து சுத்தம் செய்து கொள்வார்.

கருத்துகள் இல்லை